| மனிதன்
என்பவன் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கு என்பதே உண்மை இன்றைக்கும் எத்தனை அறிவியல் வளர்ச்சியடைந்தாலும் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தாலும் இன்னும் அவனுக்குள் ஒரு விலங்கின் குணம் மறைந்து இருப்பதை நாம் உணருகிறோம் . |
||||||||||||||
| குரங்கில்
இருந்து பிறந்தவன் மனிதன் முதலில் மரத்திற்கு மரம் தாவியும் தவழ்ந்தும் சென்றுகொண்டிருதவன் நடந்து சென்றால் என்ன ? என்று ஒரு மாற்றத்தை தனக்குள் யோசித்ததால் மனிதன் ஆனான் . |
||||||||||||||
| இந்த
மாறுதல்களும் தேடுதல்களுமே நாகரிகத்தின் முதல் படி ஆகும் .ஆரம்ப காலத்தில் காடுகளில் திரிந்து உணவுகளை பச்சையாக சாப்பிட்டு கொண்டு இருந்தவன் கற்களின் உராயவால் தீயை உருவாக்கினான் அதில் சமைத்து சாப்பிட தொடங்கினான் .ஆடைகள் அணியாமல் சுற்றி திரிந்தவன் இலைகளை ஆடைகளாக அணிய ஆரமித்தான் ,அதன் பின் இயற்கை விளைவுகளான மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி நிற்க மரத்தின் நிழலையும் ,மலை குகைகளையும் நாடினான் பின்னாளில் அதுவே வீடு என்ற ஒரு அமைப்பு உருவாக்க காரணமானது. |
||||||||||||||
| இவாறு
தன் தேவையை உணர ஆரமிதத்தின் விளைவால் தேடுதலில் ஈடுபட்டான் தேடிய பொருள்களை காலம் கருதி சேமிக்க பழகினான் அதன் பின் இயற்கையின் மாற்றங்களை உணர்ந்து அதற்க்கு தகுந்தால் போல தன்னை மாற்றிக்கொள்ள முயன்றான். இதுவே மனிதனின் ஆரம்ப நிலை . |
||||||||||||||
| மேற்குறிப்பிட்ட
அனைத்தும் அவனின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தேடுதல்களின் மாற்றம் அதன் பின் அவன் தனது உள்ள தேவைகளை எவாறு உணர்ந்தான் என்பதை பார்க்கலாம் . | ||||||||||||||
| மனிதன்
தன் உள்ளத்தின் உணர்வுகளை முதலில் வெளிபடுத்த நினைத்தபோதுதான் மொழி என்ற ஒரு அற்புதம் ஆரம்பமானது . |
||||||||||||||
| மனிதன்
வேட்டையாட செல்லும் போது அவனை தாக்கிய விலங்குகளை கண்டு பயந்தான் அந்த விலங்குகள் அங்கு இருப்பதை தனக்கு பின் வருபவர்களுக்கு தெரிவிக்க நினைத்து விலங்கின் படத்தை வரைந்தான் குறியீடு மூலமாக அங்கே விலங்கு இருப்பதை உணர்த்த நினைத்தான் இதுதான் குறியீடு (சிம்பல்ஸ்) என்ற மொழியின் ஆரம்ப கட்ட நாகரிகம் ஆகும் . அதன் பின் மனிதன் தன் உள்ளத்து உணர்வுகளை தன் எதிரில் இருபவர்களுக்கு கண் சாடை மூலமாகவும் ,கை அசைவுகள் மூலமாகவும் உணர்த்த விரும்பினான். | ||||||||||||||
| தாய் வழிசமூகம் | ||||||||||||||
| ஆண்
பெண் படைப்பின் நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை உணர்ந்த மனிதன் பெண்ணை தாய்மை அடைய செய்கிறான் அப்படி தாய்மை அடைந்த பெண்களை வணங்க ஆரமித்தான் ஒரு குழுவாக சேர்ந்து ஆரமித்த மனிதனை தாய்மையடைந்த பெண் அரவணைத்து வழிநடத்தி சென்றதால் அவளை தெய்வமாக வழிபட்டான் அவள் இறந்த பின்னும் அவளின் பிரிவை தாங்கமுடியாத மனிதன் அவளின் நினைவாக அவளை மண்ணில் புதைத்து அந்த இடத்தை கோவிலாக வணங்கினான் இதுவே கால போக்கில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு காரணமானது |
||||||||||||||
| இன்று பெண் தெய்வங்களை அம்மன் என்று பொதுவாக அலைகிறார்கள் | ||||||||||||||
| மழையை
மாரியம்மனாகவும் அக்கினியை அக்கினி அம்மனாகவும் ,நீரை கடலைம்மாவகவும் அலைகிறார்கள் ( காவேரி, வைகை ,கங்கை ,யமுனை ) என்று பெண் பெயர்களில் நதிகள் வர காரணம் இதுவே . தீமைகள் அளிப்பவளாக காளியை வணங்குகிறார்கள் . |
||||||||||||||
| தந்தை வழிசமூகம் | ||||||||||||||
| அதற்கடுத்து
வந்த கால கட்டங்களில் ஆணாதிக்கம் தலை தூக்கியதால் தனகென்று ஒரு பெண் எப்போதும் பணிவிடை செய்ய வேண்டும் என்று நினைத்த ஆண் திருமணம் என்ற ஒரு பந்தத்தை உருவாக்கி அதில் பெண்ணை அடிமை படுத்தினான் தான் மட்டுமே அனைவரையும் காக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்றும் அவனை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் வணங்க வேண்டும் என்று நினைத்தால் இன்றைக்கு இருக்கின்ற காவல் தெய்வங்களான அயனார் ,கருப்பசாமி போன்ற தெய்வங்கள் , |
||||||||||||||
| மேலும்
தன் திருமண வாழ்வின் இன்பத்தையும் குழந்தை பேறு இவற்றை அனுபவித்தவன் கடவுளையும் தன்னை போல் எண்ணியதன் விளைவு சிவன் பார்வதி அவர்களின் மகன்கள் முருகன் விநாயகர் போன்ற தெய்வங்கள் இங்கேயும் அவனின் ஆணாதிக்க சிந்தனை மேலோங்கி இருக்கிறது |
||||||||||||||
| இரண்டும்
ஆண் மக்கள் பெண் மகளை பற்றிய செய்தி குறைவு அதன் பின் தன் இன்பத்திற்காக பல பெண்களை அடிமைபடுத்தி இன்புற்றான் ஒன்றுக்கு மேற் பட்ட தீர்மானங்களை செய்தான் அதற்க்கு சான்றாக முருகன் வள்ளி தெய்வானை , பெருமாள் ,பூதேவி சீதேவி என்று இரண்டு மனைவி கொண்ட கடவுளர்களை வழிபட்டு அதை நடைமுறை படுத்தினான். |
||||||||||||||
| இவாறு
மனிதன் மனிதனை அடக்க நினைத்ததின் விளைவு போர் என்ற ஓன்று உருவாக காரணமாயிற்று அதன் பின் தான் வாழ்ந்த இடத்தில தன்னை விட எளிய உயிரினமான ஆடு மாடுகளை அடிமை படுத்தி தனக்கு சாதகமான வேலைகளை கொடுத்தான் பொத்தி சுமத்தல் போன்ற வேலைகளை தந்தவன் அதன் பின் பசி பட்டினி இயற்கையின் சீற்றம் காரணமாக உண்ண உணவு இல்லாத சூழலில் ஆடுகளை கொன்று அவற்றை உணவாக உட்கொண்டான் இதுவே பின்னாளில் மாமிச பிரியனாக அவனை உருவாக்கியது |
||||||||||||||
| மனித
இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர் நிலை" இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப முறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது. |
||||||||||||||
| காதல்
மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு" என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் ஏற்பட்டது. |
||||||||||||||
| தனிநபர்
சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்" (கோன் - இடையன், அரசன்; இடைச்சி - ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே" பின்னாளில் அரசனின் "செங்கோல்" ஆயிற்று. | ||||||||||||||
| அதன்
பின் மாடுகளை , மரங்களை கொண்டு வண்டி செய்து எடையுள்ள பொருள்களை அதில் ஏற்றி வேவ்வேறு இடங்களுக்கு சென்றான் இன்று car என்ற நான்கு சர்க்கார வாகனம் உருவாக்க அதுதான் காரணம் . |
||||||||||||||
| இவாறு மனிதனின் ஆழ்மனம் மாற்றத்தை விரும்பியத்தன் விளைவு இன்று பல கட்டிடங்களும் | ||||||||||||||
| சொகுசு
பேருந்துகளும் , விமானங்களும் மின்சார ரயில்கள், ராக்கெட்டுகள் என்று நீண்டு
கொண்டே போகிறது ஆனாலும் நம்மால் இன்னும் மாற்றமுடியாத விசயங்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது |
||||||||||||||
| இயற்கை கடவுளர்கள் | ||||||||||||||
| கடவுளின் தோற்றம் | ||||||||||||||
|
மனிதன்
உருவான ஆரம்ப கால கட்டத்தில் அவன் தன்னைவிட சிறந்த ஓன்று உலகில் இல்லை என்ற கர்வத்துடன் நடமாடிகொன்றிந்தான் . விலங்குகளை வேட்டை ஆடியும் மரம் செடிகொடிகளை அழித்தும் இயற்கையை பாழ்படுத்தி மகிழ்ந்து இருந்த நேரத்தில் முதல் முறையாக அவன் பார்த்து பயந்தது இயற்கையின் அதிசயமான தீயை. |
||||||||||||||
| அக்கினி கடவுள் | ||||||||||||||
| அக்கினி
கடவுள் எவ்வாறு உருவானார் என்று பார்த்தால் காட்டில் மரங்கள் ஒன்றோடு ஓன்று உராய்ந்ததால் ஏற்பட்ட தீ சருகளில் வேகமாக பரவி காட்டு தீ உருவானது அதன் வெப்பத்தையும் அக்கினி சுவாலையையும் கண்டு மனிதன் மிரண்டு போனான் தன்னால் தொடமுடியாத கட்டுபடுத்த முடியாத அக்கினியை கண்டு பயந்து அதை வணங்க ஆரமித்தான் . |
||||||||||||||
| வாயு பகவான் | ||||||||||||||
| அக்கினியை
கண்டு வணக்கியவன் அதன் பின் வேகமான காற்று சூறாவளியாய் சுழன்று மரம் செடி கொடிகளோடு மனிதனையும் சுழற்றி வீசியபோது காற்றை கண்டு பயந்து தன்னால் அதை ஒன்றும் செய்ய முடியாது தன்னை மீறிய சக்தியாக இருக்கிறது என்று உணர்ந்தவன் காற்றை வாயுவாக வணங்க ஆரமித்தான். |
||||||||||||||
| வருண பகவான் | ||||||||||||||
| காற்றின்
வலிமையை உணர்ந்தவன் அதன்பின் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கையும் அதனால் கடலின் கொந்தளிப்பையும் கண்டு மிரண்டான் மழையின் இடைவிடாத சீற்றத்தில் மூழ்கிப்போன பூமியை கண்ட பின் தன் கர்வதைஎல்லாம் உள்ளே புதைத்து வானை நோக்கி கையெடுத்து வணங்கி என்னை காப்பாற்று என்று கதறினான் அதன் பின் இயற்கை தன் சீற்றத்தை குறைத்து இயல்பு நிலைக்கு வந்ததால் அவர்களை மனிதன் வணங்கினான் . |
||||||||||||||
| இவ்வாறுதான்
முதலில் இயற்கையின் வடிவமாகிய நீர் நிலம் காற்று என்பனவற்றை முறையாக அக்கினி , வாயு,வருணன் என்று வணங்க ஆரமித்தான் இதற்கான சான்று நம்முடைய பழமையான வேதங்களாகிய ரிக், யசுர், சாம , அதர்வண வேதங்கள் குறிப்பிடுகின்றன தொல்காப்பியர் எழுதிய "தொல்காப்பிய நூலில் பொருள் அதிகாரத்தில் கருப்பொருள் என்னும் பகுதியில் இந்த தெய்வங்கள் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி விரிவாக எழுதிருக்கிறார் மேலும் |
||||||||||||||
| “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி | ||||||||||||||
| ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் | ||||||||||||||
| கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு | ||||||||||||||
| வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” ( மாணிக்கவாசகர் - திருவாசகம் ) | ||||||||||||||
| "தெய்வம் | ||||||||||||||
| நன்மை தீமை அச்சம் சார்தல் என்று | ||||||||||||||
| அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ | ||||||||||||||
| உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக் | ||||||||||||||
| கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. " (தொல்காப்பியம் - பொருள்) | ||||||||||||||
| மரமான கடவுள் | ||||||||||||||
| இயற்கையின்அதிசயமான
மரங்களை கடவுளாக மனிதன் இன்னும் பூசிக்கிறான் அதற்க்கு காரணம் மழைக்கு வெயிலுக்கும் காற்றுக்கும் பயந்து அவன் ஒதுங்கியபோது அவனை தன் குடை நிழலின் கீழ் அரவணைத்து பாதுகாத்து மரங்கள் . விலங்குகள் தாக்கும் போது மத்தின் மீது ஏறி அமர்ந்து தன்னை காதுகொண்டான் அதனால் மரங்களை தெய்வமாக வணங்கி தன் நன்றியை தெரிவித்தான் இதன் விளைவால் பின் நாளில் மரத்தின் மீது ஒரு இருப்பிடத்தை உருவாக்கினான் அதுவே இன்று வீடு என்ற ஒரு அமைப்பு உருவாக்க காரணமானது |
||||||||||||||
| நாகரிக வளர்ச்சியில் கடவுள்கள் | ||||||||||||||
|
மனிதன்
தன் உள்ள உணர்வுகளை வெளியே சொல்ல நினைத்ததின் விளைவாக மொழி என்ற ஒரு சிறப்பு உருவானது மொழியின் ஆரம்ப நிலையான குறியீடுகள் மூலமாக தன் மனதில் உள்ளதை மற்றவருக்கு தெரிவிக்க நினைத்தான்.இதை சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன அதன் பின் மாற்றத்தை விரும்ப நினைத்த மனிதன் மரத்தை விட்டு அதிக பாதுகாப்பு கருதி மலைகளை குடைந்து அதில் தன் இருப்பை நிலை நிறுத்தினான் இதுவே பிற் காலத்தில் மாமல்லர்களின் குகை கோவில்களும் சோழர்களின் தஞ்சை பெரிய கோவிலும் உருவாக்க காரணமாக இருந்தது. |
||||||||||||||
| அதன்
பின் காலப்போக்கில் தன்னுடைய இருப்பிடத்தை விட உயர்ந்த ஒன்றில் கடவுளை வைக்க நினைத்த மனிதன் அதற்க்கு ஒரு உருவம் கொடுக்க நினைத்தான் அவனின் கற்பனை உருவமே அவனை விட எல்லாவற்றிலும் உயர்ந்த தன்னை ஒத்த உருவத்தை கொடுத்தான் அதன் பின் உயர்ந்த இடத்தில பாதுகாப்பாக கடவுளை வைக்க நினைத்து தன் வசிப்பிடம் போன்று முதலில் உருவாகினான் காலப்போக்கில் மாடக்கோவில் யானை கோவில் கொகுடிகொவில் மணிகோவில் என உயர்ந்த கட்டிடங்களில் இறைவனை அமர்த்தி அழகு பார்த்தான் .இதை அதர்வண வேதமும் , அர்த்த சாஸ்திரமும் , வான நூலும் குறிப்பிடுகிறது. |
||||||||||||||
| இன்று
நம் வாழ்க்கை முறைகளை போல கோவில்களையும் டைல்ஸ் மார்பிள்ஸ் போன்ற அழகு கற்களால் அலங்கரிக்கிறோம். ஆனாலும் இன்னும் கூரை வேய்ந்த கோவில்களும் சுடுமண் கோவில்களும் இருகின்றன எ.கா நெல்லை மாவட்டத்தில் பச்சை நாயகியம்மன் கோவில் கூரைவேய்ந்த கோவிலாக இன்றும் காணப்படுகிறது. |
||||||||||||||
| ஆண்
பெண் படைப்பின் நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை உணர்ந்த மனிதன் பெண்ணை தாய்மை அடைய செய்கிறான் அப்படி தாய்மை அடைந்த பெண்களை வணங்க ஆரமித்தான் ஒரு குழுவாக சேர்ந்து ஆரமித்த மனிதனை தாய்மையடைந்த பெண் அரவணைத்து வழிநடத்தி சென்றதால் அவளை தெய்வமாக வழிபட்டான் அவள் இறந்த பின்னும் அவளின் பிரிவை தாங்க முடியாத மனிதன் அவளின் நினைவாக அவளை மண்ணில் புதைத்து அந்த இடத்தை கோவிலாக வணங்கினான் இதுவே கால போக்கில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு காரணமானது |
||||||||||||||
| இன்று பெண் தெய்வங்களை அம்மன் என்று பொதுவாக அலைகிறார்கள் | ||||||||||||||
| மழையை
மாரியம்மனாகவும் அக்கினியை அக்கினி அம்மனாகவும் ,நீரை கடலைம்மாவகவும் அலைகிறார்கள் ( காவேரி, வைகை ,கங்கை ,யமுனை )என்று பெண் பெயர்களில் நதிகள் வர காரணம் இதுவே . தீமைகள் அளிப்பவளாக காளியை வணங்குகிறார்கள் . | ||||||||||||||
| அதற்கடுத்து
வந்த கால கட்டங்களில் ஆணாதிக்கம் தலை தூக்கியதால் தனகென்று ஒரு பெண் எப்போதும் பணிவிடை செய்ய வேண்டும் என்று நினைத்த ஆண் திருமணம் என்ற ஒரு பந்தத்தை உருவாக்கி அதில் பெண்ணை அடிமை படுத்தினான் தான் மட்டுமே அனைவரையும் காக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்றும் அவனை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் வணங்க வேண்டும் என்று நினைத்தால் இன்றைக்கு இருக்கின்ற காவல் தெய்வங்களான அயனார் , கருப்பசாமி போன்ற தெய்வங்கள் , |
||||||||||||||
| கடவுளும் உளவியலும் | ||||||||||||||
| சங்க
காலம் என்று அழைக்கப்பட்ட இடைக்காலத்தில் பல பக்தி இலைக்கியங்கள் தோன்றின இதற்க்கு காரணம் மொழியின் உச்சகட்ட வளர்ச்சி . தன் உள்ளத்தில் கடவுளை உணர ஆரமித்தான் தன் வாழ்வில் நடக்கும் அணைத்து நல்ல செயல்களுக்கும் தன்னை மீறிய சக்தியான கடவுள் தான் காரணம் என்று எண்ணி கடவுளை காதல் செய்தான் அன்பு பாராட்டினான் இதில் அவரவர் வாழ்க்கை முறைகேர்ப்ப கடவுளின் உருவங்களும் அமைத்து வழிபட்டனர் சமணர்கள் வருகையால் சைவம் வைணவம் இரண்டு பக்தி மார்க்கம் விரைவாக பரவியது . அதற்க்கு முன் உள்ளம் பற்றிய உளவியளாரின் கருத்தை நாம் பார்க்க வேண்டும் . |
||||||||||||||
| இந்த
கருத்தை நாம் நிச்சயம் மறுக்க மாட்டோம் அனைவரின் மனதிலும் ஆசைகள் புதைந்து கிடக்கிறது அதிலும் நிறைவேறாத ஆசைகள் நிறையவே இருகின்றன அதனால் ஏற்படும் விளைவே இன்றைய சமூக சீர்கேடுகளுக்கான அடிப்படை ஆகும் எனவே வெளிப்படையாக இருங்கள் மனதில் இருப்பதை மறைத்து போலியாக இருப்பதை மாற்றுங்கள் அறிவியல் வளர்ச்சி என்பது மனிதனுக்கு நன்மை செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் ஆனால் தீமைகள் தான் அதிகமாகி கொண்டு இருகின்றது. இதை தடுக்க வேண்டும். |
||||||||||||||
| என்றும் மாறாதவை | ||||||||||||||
| அம்மா
அப்பா என்ற உறவுமுறைகள் இன்றும் மாறாத ஒன்றுதான் இறப்பும் பிறப்பும் இன்னும் மாறவில்லை அதே போன்று நாம் சுவாசிக்கும் முறைகள் நம் உடல் கூறுகள் இவை அனைத்தும் முழுமையாய் மாறவில்லை உண்ணும் உணவில்கூட பெரிதாய் மாற்றம் இல்லை .மேலும் கடவுளரை வணங்கும் நிலை ஆதிமுதல் இன்று வரை தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கிறது. |
||||||||||||||
| கடவுளரின்
உருவங்களும் இருப்பிடங்களும் கால சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்டாலும்
நம்பிக்கைகள் இன்னும் மாறவில்லை.காரணம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்ற மனிதனின் நம்பிக்கை தான். |
||||||||||||||
| அன்பை நோக்கி பயணம் | ||||||||||||||
| எத்தனை
சாதனைகள் புரிந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் எல்லாரும் கடைசியில் அன்பை தேடித்தான் அலைந்துகொண்டிருகிறோம் இன்று அலைபேசி வாயிலாகவும் , மின்னஞ்சல் மூலமாகவும் முக நூல் மூலமாகவும் உலகின் ஏதோ ஒரு மூளையில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பேசுகிறோம் எதற்காக உலக வளர்சிககவா? நாட்டின் நன்மைககவா ? இல்லை மனதிற்கு சந்தோசத்தை தரும் , ஆறுதல் வார்த்தைகளை சொல்லும் அன்பான உள்ளம்கொண்ட நண்பர்களையும் காதலர்களையும் , அன்பானவர்களையும் தேடித்தான் அந்த பயணம் செல்கிறது என்பதை மறுக்க இயலாது. இதை முழுமையாய் அறியாததால் தான் நமக்குள் பொறாமை ,பகை , போன்ற தீய எண்ணங்களை வளர்த்துகொண்டு ஒருவரை ஒருவர் அழித்து கொண்டு இருக்கிறோம் இன்னும் நமக்குள் ஒருவரை ஒருவர் அடிமை செய்வதும் மீண்டும் விலங்கு நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம் எனவே மனிதனை மனிதனாக மதியுங்கள். |
||||||||||||||
| . | ||||||||||||||
| முடிவுரை | ||||||||||||||
| எனவே
பண்டைய நாகரிகம் முதல் இன்றைய நாகரிக மாற்றங்கள் வரை இன்னும் மாறாத ஓன்று தேடல். இது மனிதனின் மனதை தேடும் ,அன்பை தேடும் தேடல் தான் எனவே ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து ஒற்றுமையான ஒரு சமூதாயத்தையும் மனித நேயமிக்க ஒரு உலகை உருவாக்குவோம் அறிவியலின் வளர்ச்சி நல்லதை ஆக்குவதற்காக இருக்கட்டும் தீமைகளை அழிபதற்காக இருக்கட்டும் . |
||||||||||||||
Wednesday, June 6, 2012
பண்டைய நாகரிகமும் இன்றைய மாற்றமும்
Subscribe to:
Post Comments (Atom)





2 comments:
//மனிதன் என்பவன் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கு என்பதே உண்மை//
விலங்குக்கு படிக்க தெரியாதே....அப்படின்னா மனிதனா மேற்கொண்டு படிக்கலாமா?
இதில் வருத்தப்படும் கசப்பான உண்மை என்னவென்றால் அன்பை ஒவ்வொரு மனதிற்குள்ளும் ஒளித்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடும் மனித வரலாறுதான் காலங்காலமாகப் போதிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment