இசை வாழ்வில் அனைத்து தரப்பிலும் வரவேற்க்கபடுகின்ற ஓன்று ........
ஜாதிமத பேதமின்றி சமத்துவ பந்தியிடும் வள்ளல் அது
நல்லவன் - கெட்டவன் , பணக்காரன் - ஏழை , என்று எந்தவித பாகுபாடும்
பார்க்காமல் அனைவரையும் அரவணைக்கும் ஆத்ம நண்பன் ..........
நம் எல்லோருக்கும் பிடித்த அந்த இசையும் ஓசையுடையது தான் ..
ஆனால் அந்த இசைக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளிகளில் இருக்கும்
அமைத்திதான் இறைமை ......
அந்த அமைதியை நாம் பல நேரங்களில் உணருகிறோம் அப்போது நம்மால்
பேச இயலாது ........வெளியே நடப்பதை உணர மாட்டோம் ........எதுவும்
இல்லாத ஒரு அமைதி நிலைக்கு செல்லுவோம் ...............
பேசும் போது கூட இரண்டு சொற்களுக்கான ஒரு இடைவெளியில் ஒரு
ஓசையற்ற தன்மையை உணர முடியும் ...
ஒவொரு ஓசையிலும் இருக்கும் ஓசையற்ற நிலையை புரிந்துகொள்ள நமக்கு
சில கால அவகாசங்கள் தேவைபடுகிறது .
அப்படிதான் தியானமும்
தியானம் என்பது நாம் இதுவரை கற்றுக்கொண்ட தெரிந்துகொண்ட
விசயங்களை வெளியேற்றுவது ..
"அதற்க்கு நம்மை தயார்படுத்த வேண்டும் என்றால் வெளியே நடக்கிற
நிகழ்வுகளை புரிந்துகொண்டு நம்மை அதிலிருந்து துண்டித்துக்கொள்ள
வேண்டும் ."
"தயிரிலிருந்து வெண்ணையை பிரித்தெடுக்க ஏற்ப்படும் கால
அவகாசத்தை போல " காத்திருப்பது அவசியம் தியானத்திற்கு .
(ஓசை தொடரும் )
No comments:
Post a Comment